தெரியாமல்
சொன்ன சொல்லெல்லாம் மெய்ப்பிக்க
தேடும் வரம் நீ
கேட்டதெல்லாம் தராத பாவி நான்
இழந்த உன் காதல்
தந்த பிதற்றல் ..
கடவுள் இல்லா உலகை நம்ப வைத்த கடவுள் நீ
அன்பெனும் உண்மையை அறியா பைத்தியம் நான்
கெஞ்சல்களுக்கு கிடைத்த அவமானத்தின்
அழுகை இது
உண்மையான அன்பினை அறியா
இவ்வுலகின் தற்குறியாகி
வாழ்க்கையின் இறுதியை விரைவாய்
கேட்கும் தாழ்வுமனப்பான்மை
நீ இல்லா நேரமெல்லாம் நான்
தாழ்ந்து போனவன் தான்...
Comments
Post a Comment